மேய்ப்பன் - 3

சகரியா - 11 ம் அதிகாரம் 17 ம் வசனத்தை பார்க்கும்போது இங்கே ஒரு மேய்ப்பனை பற்றி கூறப்பட்டுள்ளது.
மந்தையைக் கைவிடுகிற மேய்ப்பன்
இப்படிப்பட்ட மேய்ப்பர்களை கர்தர் வெறுக்கிறார் இவர்களை பற்றி தேவன் சகரியா தீர்கதரிசி முலமாக கூறுகிறார்
சகரியா - 11 : 17 ல்
மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலதுகண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போம்; அவன் வலதுகண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.
இப்படி பட்ட மேய்ப்பர்களை பற்றி எரேமியா தீர்கதரசி மூலமாக தேவன் எச்சரிக்கிறார் எரேமியா - 23 ம் அதிகாரம் 1,2ம் வசனத்தை படிக்கும்போது
1 என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.

2 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டார்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆம் அன்பானவர்களே இப்படிப்பட்ட மேய்ப்பர்களுக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
அப்படியானால் நம்முடைய மேய்ப்பன் யார்?
நம்முடைய மேய்ப்பன் பகுத்தறிவுள்ள, மிருககுணமற்ற, மந்தையை கைவிடாத, தன்னையே மேய்க்காத, நமக்காக தன்னுடைய ஜீவனை கொடுக்கிற மேய்பனாக இருக்க வேண்டும்
யோவான் 10:14 ல் அருள்நாதர் கூறுகிறார்
நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
ஆம் அன்பானவர்களே கடைசி காலத்தில் வந்து இருகின்ற நாம் யாருக்கு பின்நாலேயும் ஓடாமல் ஆடுகளுடைய பெரிய மேய்ப்பராம், பிரதான மேய்ப்பர் இயேசுவிற்கு நம்மை ஒப்புகொடுப்போமா
நமக்காக தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்திய நல்ல மேய்ப்பனாம் நம் இயேசு கடைசி வரைக்கும் நம்முடைய ஜீவனை அழிவிலின்றும் அந்தகாரத்திலின்றும் விடுவிக்க வல்லவராக இருக்கிறார்.
எந்த பாவியேயும் தள்ளாத நேசர் இதோ நம்மையும் அழைக்கிறார்
நம்முடைய முழங்கால்களை அவருக்கு முன்பாக முடக்குவோமா, அப்பா என்னையும் உம்முடைய மந்தையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்போமா
கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

Comments