மேய்ப்பன் - 2

எரேமியா - 10 ம் அதிகாரம் 21 ம் வசனத்தை பார்க்கும்போது இங்கே ஒரு மேய்ப்பனை பற்றி கூறப்பட்டுள்ளது.
மிருககுணமுள்ள மேய்ப்பர்
இங்கே நாம் பார்க்கும்போது கர்த்தரைத் தேடாத மேய்ப்பர்களை பற்றி எரேமியா தீர்கதரிசி கூறுகிறான் மிருககுணமுள்ள மேய்ப்பர்கள்என்று.
எரேமியா - 10 ம் அதிகாரம் 21 ம் வசனத்தை படிக்கும்போது இவ்விதமாக கூறுகிறார்
மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.
கர்த்தரை தேடாத மேய்ப்பனிடத்தில் போனால் நாமும் சிதறடிக்கப்படுவோம் என்பதை மறந்து போகாதே.
லூக்கா- 11 ம் அதிகாரம் 23 ம் வசனத்தை படிக்கும்போது அருள்நாதர் இவ்விதமாக கூறுகிறார்
என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
எனவே இப்படிப்பட்ட மிருககுணமுள்ள மேய்ப்பர்களுக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
எசேக்கியேல் - 34 ம் அதிகாரம் 2 ம் வசனத்தை பார்க்கும்போது இங்கே ஒரு மேய்ப்பனை பற்றி கூறப்பட்டுள்ளது
தங்களையே மேய்க்கிற மேய்ப்பர்
இந்த மேய்ப்பர் எப்படி இருக்கிறார்கள் என பார்த்தால் இவர்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்கிறார்கள்; கொழுத்ததை அடிக்கிறார்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறார்கள்.
பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆளுகிறார்கள்.
எசேக்கியேல் - 34 ம் அதிகாரம் 3, 4 ம் வசனங்களில் இதை தெளிவாக பார்க்கலாம்
5 ம் வசனத்தை பார்க்கும்போது
மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டுபோனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின.
இப்படிப்பட்ட மேய்ப்பர்களுடைய மந்தைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின என பார்க்கிறோம்.
நாமும் காட்டு மிருகத்திற்க்கு இரை ஆகாதபடி இப்படிபட்ட மேய்ப்பர்களுக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
இப்படிபட்ட மேய்ப்பரை பார்த்து கர்தர் கூறுகிறார் எசேக்கியேல் - 34 ம் அதிகாரம் 2 ம் வசனம்
தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ!

தொடரும்-----------------------

Comments