ஜன்னலை வளைத்து 47 பவுன் கொள்ளை

நாகர்கோவில் அருகே வீட்டின் ஜன்னலை வளைத்து 47 பவுன் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீ சார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் அருகே பெருவிளை ராஜலட்சுமி நகரைச் சேர்ந்தவர் காஜா மைதீன். வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சஜினா பானு. இவர் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு பெருவிளை அருகே உள்ள தமது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இரவு 9 மணிக்கு வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஜன்னல் கம்பிகள் வளைக்கப்பட்டு, படுக்கை அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம் உட்பட 47 பவுன் நகைகள், 6 வாட்ச்கள், ரூ.700 திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
கிரில் ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் இரும்பு பீரோவைத் திறந்து, நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இது தொடர்பாக சஜினா பானு ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(ஆகவேதான் ஆண்டவர் சொல்லிருக்கிறார் : லூக்கா 12:33
cq;fSf;F cs;sitfis tpw;Wg;gpr;irnfhLq;fs;> goikaha;g;Nghfhj gzg;igfisAk; Fiwahj nghf;fp\j;ijAk; guNyhfj;jpNy cq;fSf;Fr; rk;ghjpj;JitAq;fs;> mq;Nf jpUld; mZFfpwJkpy;iy> g+r;rp nfLf;fpwJkpy;iy. )

Comments